மஜக தஞ்சை வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று “சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி” கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தின் இறுதி கட்ட பணிகள் குறித்து ஆலோசிக்க தஞ்சை வடக்கு மாவட்ட சார்பாக ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளர் சேக் முஹம்மது அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில் இன்று 30.12.2021 மாலை அய்யம்பேட்டையில் நடைபெற்றது.

இதில் ஜனவரி 8 அன்று நடைபெற உள்ள சிறைவாசிகளின் விடுதலை கோரி கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்திற்கு முன்னெடுக்க வேண்டியுள்ள இறுதி கட்ட பரப்புரை பணிகள் குறித்தும், வாகன ஏற்பாடுகள் குறித்தும் முடிவெடுக்கப்பட்டது.

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணை செயலாளர் அஹமது கபீர்,
மாநில வர்த்தக அணி செயலாளர் யூசுப்ராஜா,மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் காதர் பாட்சா, மாநில மருத்துவ சேவை அணி பொருளாளர் முஹம்மது மஃரூப் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் குடந்தை நிஜாம், தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் சேட், மாவட்ட துணை செயலாளர் இப்ராஹிம்ஷா, தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் முஹம்மது யாசின், குடந்தை நகர செயலாளர் ராஜ் முஹம்மது, அய்யம்பேட்டை நகர செயலாளர் சேக், ஒன்றிய செயலாளர்கள் அஷ்ரப் அலி, சாதிக் பாட்சா, முஹம்மது இப்ராஹிம் மற்றும் அய்யம்பேட்டை கிளை நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்
30.12.2021